பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மன்கி பாத் நிகழ்ச்சியின் போது உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உடல் பருமன் அதிகரித்தால் சர்க்கரை நோய், இதய நோய் போன்றவைகள் ஏற்படும் அபாயம் வரும். உடல் பருமன் என்பது ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்த்தல் போன்றவைகளால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2050 ஆம் ஆண்டுக்குள் 44 கோடி பேர் உடல் எடை அதிகமாக கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனையை சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தென் மாநிலங்களில் பெண்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும்  பெண்கள் அதிக அளவிலான உடல் எடையை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதே போன்று தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களிலும் பெண்களின் உடல் எடை என்பது வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.