லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், 2 பேரை ஒரு கூட்டம் வளைத்துத் தாக்கும் காட்சிகள் உள்ளன. இந்த சம்பவத்தன்று தண்ணீர் தேங்கிய சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது அங்கே சுற்றி இருக்கும் நபர்கள் சாலையில் தேங்கி கிடைக்கும் தண்ணீரை அவர்கள் மேல் வாரி அடிக்கிறார்கள். அதோடு மட்டும் விடாமல் அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை பிடித்து இழுக்கிறார்கள். இந்த இடையூறால் அந்தப் பெண் இறுதியில் கீழே சரிந்து விழுகிறார்.

இவ்வாறு பொது இடத்தில வழிப்போக்கர்களுக்கு நடக்கும் இந்த செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. இந்த அநாகரிகமான செயலான வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள் கோபங்களுடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்ததோடு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கில் இதுவரை பவன் யாதவ் மற்றும் சுனில் குமார் என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

“>