உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபித் என்ற இடத்தில் ஒரு மாணவியின் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தியவர் புர்கா அணிந்திருந்ததைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

போலீசார் 36 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். அவர் பாதிக்கப்பட்ட மாணவியுடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஆனந்த் குமார் என்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி கொடுத்த பணத்தை  திரும்பக் கேட்டதால் கோபமடைந்த அவர் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடந்த நாளில் மாணவியை பின் தொடர்ந்த ஆனந்த் குமார் புர்கா அணிந்து ஆசிட்டை  வீசியுள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யும்போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆனந்த் குமார் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்த் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.