கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்தம்மாள். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தம்மாவின் கணவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு விட்டல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் அனுமந்தம்மாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மல்லப்பா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்து விட்டல் தனது தாயை கண்டித்துள்ளார். ஆனால் அனுமந்தம்மா தனது மகன் கூறியதை கண்டு கொள்ளவில்லை. மேலும் தனது கள்ளக்காதலனிடம் விட்டலை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மல்லப்பா, அவரது நண்பர் மஞ்சுநாத் ஆகியோர் சிறுவனான விட்டலை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதற்கிடையே தனது மகன் காணாமல் போனதாக அனுமந்தம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அனுமந்தம்மா உள்பட 3 பெரும் இணைந்து சிறுவனை கொன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.