எந்த தகப்பனுக்கும் நடக்க கூடாத துயரம் இது என்று பாடகி பவதாரிணி இறப்புக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உலகத்தில் உள்ள பல மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது இளையராஜாவின் இசை ஆறுதலாக இருந்துள்ளது. பல பேரின் மனதை தேற்றி உள்ளது. இன்று அவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவருக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை என்று வேதனையை தெரிவித்துள்ளார்.