
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேரலையில் ஆளுங்கட்சியினர் மற்றும் சபாநாயகர் மட்டும் தான் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளை சட்டசபையில் நேரலையில் காட்டுவதில்லை எனவும் அவர்கள் கேட்கும் கேள்விகள் மறைக்கப்படுகிறது எனவும் ஆளும் கட்சியினரை மட்டும் தான் காட்டுகின்றனர் எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?
சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை.
எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா திரு.ஸ்டாலின் அவர்களே?
எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்?
“#யார்_அந்த_SIR?” என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால்,
மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?
மக்கள் நலனுக்கான,
எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது
ஜனநாயகப் படுகொலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக,
மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம்,
பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை;
திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!