இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் குடியிருப்பதாவது தேவையான நிதியே மத்திய அரசு வழங்கவில்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்தார். இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார்.

ஆனால் டாஸ்மாக் நிறுவன விசாரணைக்கு பயந்து தான் கூட்டத்தில் பங்கேற்றார் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பயம் பற்றி எல்லாம் கோழை பழனிச்சாமி பேசலாமா?

பாஜகவுடன் நேரடி கூட்டணி இல்லாமல் கள்ளக் கூட்டணி காலத்தில் கூட பாஜகவுக்கு பயந்த பயந்தாங்கோலி தானே பழனிச்சாமி. அதிமுகவின் தீர்மானங்களில் கூட மோடியையோ, ஒன்றிய அரசையோ கண்டிக்காமல் வலியுறுத்திக்கிறோம் என்ற வார்த்தையை போட்டு தப்பித்த சூராதி சூரர் அல்லவா பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மோடி என்றால் பயம். அமைச்சா என்றால் பயம். அமலாக்கத்துறை என்றால் பயம். வருமானவரித்துறை என்றால் பயம். ஆளுநர் என்றால் பயம். தேர்தல் ஆணையம் என்றால் பயம். இரட்டை இலை சின்னம் என்றால் பயம். எல்லாவற்றிற்கும் பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் பழனிச்சாமி என கடுமையாக விமர்சித்துள்ளார்.