
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார். கடுமையான நிதி பற்றாக்குறை நிலவுகிறது. எத்தனை ஆயிரம் கோடி நிதியை நிறுத்தினாலும் எங்களுடைய பணி தொடரும். தமிழகத்திற்கு இரு மொழி கொள்கை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சீமான் எதை வைத்து இப்படி சொல்கின்றார் என எனக்கு தெரியவில்லை. பழுத்த மரத்தின் மீது கல் எறிந்தால் லாபம் இருக்கும் என்று திமுக மீது குற்றம் சாட்டுகின்றனர். எந்த ஒரு சூழல் வந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். ஓபிஎஸ் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டார். எங்களுடைய ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அறிவித்த அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை கூகுளில் நீங்களே தேடி தெரிந்து கொள்ளுங்கள் என சேகர் பாபு பேசியுள்ளார்.