தாய்லாந்து நாட்டில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சாயதா. இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் இளம் பாடகியாக வலம் வந்த அவர் தற்போது உயிரிழந்து விட்டார். அதாவது இவருக்கு திடீரென கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மசாஜ் செய்துள்ளார். அவர் ஒரு மசாஜ் சென்டருக்கு சென்ற முதல்முறையாக மசாஜ் செய்து கொண்ட பிறகு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் நன்றாக இருந்த நிலையில் இரண்டாவது முறையாக மசாஜ் செய்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு கழுத்தை முறுக்கும் மசாஜ் செய்யப்பட்ட நிலையில், சிறிது நாட்களில் வலி அதிகமாகி விட்டது.

அவருக்கு முதுகு மற்றும் வயிற்றிலும் அதிகமான வலி ஏற்பட்டது. இது மசாஜ் செய்ததால் ஏற்பட்ட வலி என்று நினைத்த அந்த பெண் மீண்டும் மசாஜ் செய்துள்ளார். அவருக்கு மூன்றாவது முறையாக புதிய பணியாளர் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது வலி மேலும் அதிகமானது. அவருக்கு கழுத்தில் அதிகமான அளவுக்கு வீக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்து விட்டார். மேலும் அவர் இறப்பதற்கு முன்பாக மசாஜ் எப்படி இருந்தது என்பது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.