
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் மனிதன் பட பாணியில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கு நடைமேடையில் சிலர் படுத்து தூங்கியுள்ளனர். அந்த இரவு நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு லாரி தறிக்கெட்டு ஓடிய நிலையில் நடைமேடையில் தூங்கியவர்கள் மீது ஏறியது.
இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.