இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை உறைய வைக்க மட்டுமே திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் மக்கள் சாப்பிடும் பொருட்களான பிஸ்கட், வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளுடன் கலந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.