
இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் வினோதமாக அமைந்துள்ளது. அதாவது உடலுறவு இல்லாமல் ஒரு பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயமான சம்பவம் இங்கிலாந்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான தான்யா பென்னட் என்ற மார்க்கெட்டிங் மேலாளர், IVF சிகிச்சை இல்லாமலேயே குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தான்யா தனது கடந்த உறவுகளில் ஏற்பட்ட வேதனைகளால் மனவெதும்பிய நிலையில், இரண்டு தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, இனி தாயாக முடியாது என நம்பிக்கையை இழந்திருந்த தான்யா, ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கான தனது ஆசையை நிறைவேற்ற, விலையுயர்ந்த IVF சிகிச்சையை விட ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுத்தார்.
தான்யா, தனது நண்பர் ஒருவரின் விந்தணுவை பயன்படுத்தி, தனியாகவே ‘கால்போல் சிரிஞ்ச்’ மூலம் கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதாவது தன்னுடைய நண்பரின் விந்தணுவை தானாகவே உடம்பில் செலுத்தி கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது மருத்துவ ரீதியாக அபூர்வம் மற்றும் சாதாரணமாக நடக்காத ஒரு முறை. IVF சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் சூழலில், இந்த எளிய முறையே தான்யா தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தற்போது தான்யா தனது குழந்தையை தனியாக வளர்த்துவருகிறார். “என் மகன் எதிர்காலத்தில் தந்தையைப் பற்றி கேட்டால், உண்மையைத்தான் சொல்வேன். ஒரு உறவுக்காக காத்திருக்காமல், குழந்தையை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு சுதந்திரமும், மகிழ்ச்சியும் தரும்,” என்கிறார் தான்யா. இது போல தான் விரும்பும் வாழ்க்கையை பெண்கள் தாங்களே தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
உலகம் முழுவதும், “தாயாக மாறவேண்டும்” என்ற ஆர்வம் பல பெண்களின் கனவாகவே இருக்கிறது. ஆனால், தான்யா எடுத்த இந்த வித்தியாசமான தீர்மானம், தாய்மையின் உணர்வை வாழ்த்தும் விதமாகவும், பெண்கள் தங்களால் தனியாகவும் வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் இருக்கிறது.
மேலும் இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. ‘உடலுறவு இல்லாமல் தாயாக முடியும்’ என்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மக்கள் விவாதித்து வருகின்றனர்.