
மத்தியப் பிரதேசம் பீண்ட் மாவட்டத்தில் உள்ள ஊமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலே கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது ஒரு கணவர், மனைவியுடன் உடலுறவுக்குச் செல்லும் தருணத்தில் வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளார். மனைவி அதை கண்டித்ததும், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் கழுத்து மீது தனது கால்களை வைத்து மிதித்த நிலையில், அவர் துடிதுடி துடித்து இறந்துவிட்டார்.
20 வயதுடைய இந்த பெண், லாலா கா புரா பகுதியில் வசிக்கும் ஜபர் சிங் என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். சம்பவ நாளில், ஜபர் சிங் நஷையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போதே தன்னுடைய மொபைலில் வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளார். மனைவி இதற்கு கடுமையாக எதிர்த்தபோது, கோபம் தாங்க முடியாமல் மனைவியின் கழுத்தில் கால் வைத்து அழுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவல் தெரிந்ததும், ஜபர் சிங்கின் தந்தை பரத் சிங், உடனே இந்த விவரத்தை தன் மருமகளின் குடும்த்திற்கு தெரிவித்தார். தகவல் அறிந்ததும், இறந்த பெண்ணின் உறவினர்கள், அவரின் கணவரின் குடும்ப உறுப்பினர்களை குற்றம் சாட்டி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக போலீசார், ஜபர் சிங் மற்றும் அவரது தந்தை பரத் சிங் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
ஊமரி காவல் நிலையத் தலைவர் சிவபிரதாப் சிங் குஷ்வாஹா கூறுகையில், “மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளோம். சந்தேகத்தின் பேரில், குற்றம் நடந்த தருணத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஜபர் சிங்கின் மொபைல் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை” என தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தச் சம்பவம் குறித்து வேதனையும் கோபமும் தெரிவித்து வருகின்றனர். நவீன சாதனங்களை தவறாக பயன்படுத்தும் மனநிலை, தனிப்பட்ட வாழ்வியல் எல்லைகளை மீறி இப்படி ஒரு பயங்கர முடிவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, குடும்ப உறவுகளில் மரியாதை மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் ஒழுங்குகள் மீண்டும் கேள்விக்குள்ளாகும் வகையில் இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க, சமூக விழிப்புணர்வும், சட்ட வரம்புகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.