
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வர்ன்கார் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக இருந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டில் வேலை பார்த்த அபிஷேக் சமீபத்தில் தான் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அபிஷேக் தனது குடும்பத்துடன் பஞ்சாப் மாநிலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேக்கிற்கு சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரம் அபிஷேக் தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிலர் வாகனத்தை பார்க்கிங் செய்வது தொடர்பாக தகராறு செய்தனர்.
ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அபிஷேக்கை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக்கின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அபிஷேக் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அபிஷேக்கை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.