
கடலூர் மாவட்டம் மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(57). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் அர்ஜுனனின் மகள் அபிதா(27) காட்டுமன்னார்கோவிலில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் செய்ய 2 ஆண்டுகளாக வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் அபிதா ஒரு வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். இதனை அறிந்த அர்ஜுனன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அபிதா அந்த வாலிபருடன் பேசி வந்ததால் கோபமடைந்த அர்ஜுனன் நேற்று வீட்டில் இருந்த மகளிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அர்ஜுனன் பேனா கத்தியால் அபிதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் அவிதா சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவி விட்டு டாஸ்மார்க் சென்று மது குடித்துவிட்டு அர்ஜுனன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அபிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.