
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டியை அழைத்துள்ளார். மேலும் பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் டிவிஷன் முறையிலும் தோல்வி அடைந்தது. இரண்டு முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் 63 பேர் ஆதரவும், 154 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்த தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்பு கோரியிருந்தார் இபிஎஸ். அதிலும் தோல்வியே மிஞ்சியது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, இந்த அரசியல் மீது குற்றம், குறை கூற வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு தீர்மானமா? உட்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்படிப்பட்ட ஒருவர் மீது தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம் என எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும். பேரவை தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே இதை கருதுகிறோம். இந்த அம்பை அவை ஏற்காது என கூறியுள்ளார்.