
தேனி மாவட்டம் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(60). இவர் ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஆவார். நேற்று ராஜா திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடை பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ராஜா மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் ஓட்டுநரான முகம்மது பாரிக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.