
உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டர் 55 பகுதியில் செயல்பட்டு வந்த ஆனந்த் நிகேதன் முதியோர் இல்லம், முதியவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் ஒரு வயதான பெண்ணின் கைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பது போல காணொளி பரவி வந்ததை தொடர்ந்து, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மீனாட்சி பரலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். விசாரணையில், அந்த இல்லத்தில் 39 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கவில்லையெனவும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், முதியோர் இல்லம் பதிவு இல்லாமல் செயல்பட்டு வந்தது அம்பலமானது. மேலும், மூன்று முதியவர்களுக்கு மயக்க மருந்துகள் வழங்கப்பட்டு, கைதிகள் போல் கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடைகள், விரிப்புகள் இல்லாமல் முதியவர்கள் சிரமமாக இருந்தது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதியோர் இல்லம் விரைவில் சீல் வைக்கப்படும் என்றும், அங்கிருந்த அனைத்து முதியவர்களும் ஐந்து நாட்களுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் மாநில மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. ஜன் கல்யாண் அறக்கட்டளை சார்பில் இயங்கி வந்த இந்த மூன்று மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு முதியவரிடமிருந்து மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வசூலிக்கப்பட்டது. தற்காலிக பதிவுக்காக ரூ.2.5 லட்சம் வரை வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக, தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக முதியோர் இல்ல நிர்வாகத்திடம் பதில் கேட்கப்பட்டதிலும், அவர்கள் பதிலளிக்கத் தயங்கினர். துறை ரீதியாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக நலத்துறையின் மேற்பார்வை மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளதால், இது போன்ற சுயமரியாதையை அழிக்கும் நிலையங்களை மக்கள் கண்டித்துள்ளனர்.
#NOIDA #BREAKINGNEWS
नोएडा सेक्टर‑55 के Old Age Home में अमानवीयता की हद! राज्य महिला आयोग, समाज कल्याण विभाग और पुलिस की संयुक्त टीम ने की छापेमारी में पता चला कि वहाँ पर रहने वाले बुज़ुर्गों को गंदगी में रहने को मजबूर थे, एक महिला के हाथ बांधकर कमरे में बंद कर रखा गया था।
रेड… pic.twitter.com/mMxFWtiMLF— ASHOK KUMAR (@AshokYadavMedia) June 27, 2025