
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை முடக்கியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையே கடந்த ஒரு வாரமாக நிலவும் போர் சூழ்நிலையில், இந்நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 21) அமெரிக்கா, ஈரானின் முக்கிய அணுசக்தி உள்கட்டமைப்புகளான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க போர் விமானங்கள் குறியிடப்பட்ட இடங்களை அழித்துவிட்டு பாதுகாப்பாக வெளியேறின. இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. “தாக்குதலின் தொடக்கத்தில், ஈரானின் அணுமையங்களை அழிப்பதாக நான் உங்களுக்கு உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது,” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பதிலாக ஈரான் பதிலடி வழங்கும் வாய்ப்புகள் உள்ளதால், இஸ்ரேல் வான்வெளியை மூடுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் மோதலில் இஸ்ரேல் நேரடியாக இணைந்துள்ளதுடன், இது மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், “அமைதி இல்லையெனில் பேரழிவு வரும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.