
இஸ்ரேல்–ஈரான் இடையே ஏற்பட்ட கடும் பதற்றத்திற்கு பின்னர், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அதிரடி பேச்சு சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் முற்றிலும் அழித்துவிட்டது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் பகுதிகளில் உள்ள ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிடும் நெதன்யாகு,
“ஈரானின் அணு ஆயுத முயற்சி இனி ஒருபோதும் வெற்றிபெறாது. அதன் திட்டத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்தோம். இது தான் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்ட தாக்குதலின் வெற்றி” என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் ஈரான் மீண்டும் இதே திட்டத்தை உயிர்ப்பிக்க முயற்சித்தால், அதற்கும் இதே உறுதியுடன் எதிர்விடை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஈரானின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக கூறிய நெதன்யாகு, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அனைத்து அச்சுறுத்தல்களையும் முறியடித்துவிட்டதாகவும்,
“இது வரலாற்றில் பதிவு செய்யப்படும். உலக நாடுகளின் பாதுகாப்புப் படைகள் இந்த ஆபரேஷனை ஆய்வு செய்யும் அளவுக்கு முக்கியமான தாக்குதலாக இது இருக்கும்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.