
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல் எண் மூலமாகவும், வெளிநாட்டுப் பயணிகள் இ மெயில் மூலமாகவும் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என தெளிவுப்படுத்தியுள்ளது.