
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வழாகத்தில் பாரதியார் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டுபெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடு போல நடந்தது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் நான்கு வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களுடைய வழிகாட்டிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்த 28ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், முக்கிய அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு சாரண சாரணியர்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்த நிலையில் விழாவில் நிறைவு நாளில் முதல்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளோடு 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று.
மாநில தத்துவத்தால் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளம் நம்மிடையே இருக்க வேண்டும். தமிழகத்திற்கு பெருமை ஈட்டி தருகிறது பள்ளிக்கல்வித்துறை. கல்வித் திட்டத்தை சிறப்பாக நடத்தி காட்டியவர் தான் அன்பில் மகேஷ். இவர் தலைமையில் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரை பாராட்ட இந்த நிகழ்ச்சி ஒன்று போதாது. மாணவர்களை கல்வியால் அறிவால் முன்னேற செய்து அவர்களை வளர்வதை பார்த்து மகிழ்கிறார் மகேஷ்” என்று பெருமையாக பேசி உள்ளார்.