
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா). 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை). 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல்படை) பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. ஜூன் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. ஊதிய விகிதம் ருபாய் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.