மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்த உதவித்தொகையானது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு அரசால் வழங்கப்படும் என்று  தகவல் வெளியாகி உள்ளது.