
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக பேருந்து நிலையம் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் ஓட்டுநர்களுக்கு தாம்பரம் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி காவல் துறையிடம் அடையாள அட்டை பெற்ற பிறகு ஆட்டோக்களை ஓட்ட முடியும். வாகன பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும்படி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தை சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.