
டெல்லிக்கு செல்லும் ஒரு வந்தே பாரத ரயிலில் மழைநீர் உள்ளே கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லிக்கு செல்லும் ஒரு வந்தே பாரத ரயிலில் திடீரென மழை பெய்ததால் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அந்த வீடியோவில் டெல்லிக்கு செல்லும் பாரத் எக்ஸ்பிரஸ் இலவச நீர்வீழ்ச்சி சேவை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
வைரல் ஆகும் வீடியோவில் ஏசி வெண்டிலேட்டர் வழியாக மழைநீர் உள்ளே புகுவதை காணலாம். இதேபோன்று ஏர் இந்தியா விமானத்திலிருந்தும் தண்ணீர் புகும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வந்தே பாரத் ரயிலில் தண்ணீர் கசிந்த சம்பவத்திற்கு ரயில்வே வாரியம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்ததாக விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
A complimentary “waterfall” service unlocked in the Delhi-bound 22415 Vande Bharat express caught the passangers off-raincoat. pic.twitter.com/ioLd3HniPC
— Piyush Rai (@Benarasiyaa) June 24, 2025
सिर्फ @airindia वाले ही क्यों झरनें का मजा़ लें?
~ @AshwiniVaishnaw 😎 pic.twitter.com/ScQ9vkqFiV— Nishant Pant (@nishantpant_in) June 24, 2025