
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கொல்லம் சென்ற விரைவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண், விருத்தாச்சலம் அருகே தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து நடந்த பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.