
கர்நாடக மாநிலம் ஹொசகொப்பலு கிராமத்தில் ப்ரீத்தி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவரது கணவர் ஆட்டோ டிரைவர். இதில் ப்ரீத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடும் நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு நீண்ட நேரமாக facebook பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது புனித் என்ற 26 வயது வாலிபர் ஆன்லைனில் இருப்பதை கண்ட ப்ரீத்தி அவருக்கு நண்பர்களாக இணைய விருப்பம் தெரிவித்த நிலையில் அவரும் அதனை ஏற்கவே இருவரும் நீண்ட நேரமாக சாட்டிங் செய்தனர். மறுநாள் காலை அதாவது கடந்த 20-ம் தேதி பிரீத்தியை தொடர்பு கொண்ட புனீத் நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய நிலையில் பல்வேறு இடங்களுக்கு சென்று காரில் சுற்றி பார்த்தனர். ப்ரீத்தி வாலிபரிடம் தன்னை எங்காவது அழைத்துச் செல்லுமாறு கூறிய நிலையில் இருவரும் மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற பிறகு பின்னர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்தனர்.
இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் பிரீத்தி மீண்டும் அந்த வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு வாலிபர் மறுப்பு தெரிவித்தார். பின்னர் தன்னை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து செல்லுமாறு பிரீத்தி கூறிய நிலையில் வாலிபரும் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மீண்டும் ப்ரீத்தி வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்த நிலையில் வாலிபர் மறுத்துவிட்டார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் புனீத் ப்ரீத்தியை சரமாரியாக அடித்து தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டார். பின்னர் அவரது சடலத்தை தூக்கி கொண்டு சென்ற வாலிபர் தனக்கு சொந்தமான ஒரு விவசாய நிலத்தில் போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதற்கிடையில் ப்ரீத்தி வீட்டிற்கு திரும்பாததால் அவரது செல்போனுக்கு கணவர் தொடர்பு கொண்ட நிலையில் அதனை எடுத்து பேசிய வாலிபர் நான் வாடகை கார் டிரைவர் பேசுகிறேன் உங்கள் மனைவி என்னுடைய காரில் செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார் என கூறி தலைமறை வாகி விட்டார்.
இது தொடர்பாக அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விபரங்கள் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.