
வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(18) என்பவர் தனது நண்பர்களான முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார்.
அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் ஏழாவது மலையில் சென்று கொண்டிருந்தபோது கால் தவறி புவனேஸ்வரன் 10 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தார். இதுகுறித்து அறிந்த டோலி தூக்கும் பணியாளர்கள் விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு புவனேஸ்வரனை மீட்டு அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இடது காது மற்றும் பின் தலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.