சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 மாதங்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்த நிலையில் அந்த சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்  அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய  சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.