சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி புஷ்பா அனுப்பிய டாஸ்குகளை முடித்துக் கொடுத்ததும் லட்சுமிக்கு பணம் கிடைத்தது. பின்னர் 4.5 லட்சம் பணம் அனுப்பினால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என புஷ்பா ஆச வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி லட்சுமி பணம் அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

புஷ்பாவை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுகுறித்து லட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த புஷ்பா என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புஷ்பா ஏற்கனவே ஆன்லைன் மூலம் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.