திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி(32). இவருக்கு 8 வயதில் மகன் உள்ளார். காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி 17 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று களக்காடு கோவில்பத்து பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அப்போது காளீஸ்வரி சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய் நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.