தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புதுச்சேரி மற்றும் சென்னையை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் பெஞ்சல் புயல் நகரும் வேகம் 13 கிலோமீட்டர் இருந்து 10 கிலோமீட்டர் ஆக குறைந்தது. இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் கூறியுள்ளது.