
ஜூலை 23 இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த நிலையில் பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயங்கும் என்றும் இரவு 10.30 மணிக்கு மேல் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கமான அட்டவணையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் 2.30 மணிவரை மட்டும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.