வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஏரளமானவர்கள் செல்வார்கள். இந்த நேரங்களில் இவர்களுடைய வசதிக்காக  மெட்ரோ ரயில்  இயக்கப்பட்டு வரும். இந்நிலையில் நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று ஒருநாள்  மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.