
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாத நிலையில் நாம்தான் வாரிசுகள். நான் என்ன மிட்டா மிராசா.? இல்ல தொழிலதிபரா.? ஒரு சாதாரண தொண்டன் தான். கட்சிக்காக உழைத்து விசுவாசமா இருந்தா கதவைத் தட்டி பதவி கொடுப்பதுதான் அதிமுக.
திமுக 20 சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகனை துணை முதல்வர் ஆகியதுதான் ஸ்டாலினின் சாதனை. திமுக மகளிர் உரிமை தொகையை தரவில்லை. நாங்கள்தான் வாதாடி போராடி பெற்று தந்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆன பிறகு தான் மகளிர் உரிமைத்தொகை என்பது தரப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிவுக்கு வருவதற்கு இன்னும் 13 அமாவாசை தான் இருக்கிறது. மேலும் 4 வருட திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த அவதிப்பட்டதாகவும் அவர்களுக்கெல்லாம் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விடிவு காலம் பிறக்கும் என்று கூறினார்.