
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேசமயம் தர்மபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் நாளையும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.