
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும் எஸ்பிஐ வங்கி வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது எஸ்பிஐ வங்கி எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுடன் இணைந்து ஜன்நிவேஷ் SIP முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மக்கள் தங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை எளிதாக அணுகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும். குறைந்த முதலீட்டில் இந்த திட்டங்களை அமல்படுத்த கோரி SEBI சமீபத்தில் வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆனது ஜன் நிவேஷ் SIP முதலீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. நுழைவு தடைகளை குறைத்து டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதன் மூலமாக முதல் முறை முதலீட்டாளர்கள், சிறு சேமிப்பாளர்கள் மற்றும் அமைப்பு சாரா துறையில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் வெறும் 250 ரூபாயில் தொடங்குகின்றது. இந்த வசதி SBI YONO மற்றும் Paytm, Groww மற்றும் Zerodha போன்ற பிற டிஜிட்டல் தளங்களிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.