தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஐஜி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே அனைத்து மாவட்ட எஸ்பி கலையும் காணொளி காட்சி மூலம் தொடர்பு கொண்ட அவர் மிகவும் அராஜகத்தில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியலை அனுப்புமாறும் ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஏடிஜிபி டேவிட்சன் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுடன் மரியாதையான மற்றும் பயனுள்ள தகவல் தொடர்புகளை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கீழ் பணியாற்றுபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக பொது மக்களிடம் பேசும் போது மிஸ்டர், மிஸ்ஸஸ், சார், மேடம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஒருமையில் பேசக்கூடாது. பொதுமக்களின் குறைகளை கவனமாக கேட்க வேண்டும். உங்கள் உடல் மொழி அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. துயரத்துடன் புகார் அளிக்க வரும் மக்கள் போலீசாரை பார்த்து அச்சம் கொள்ளாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.