மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். கடந்த 2019 முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு அவரை நம்பாமல் என்னை தலைமை வகிக்க சொன்னார் ஜெயலலிதா. ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து விட்டு அவருடைய மாவட்டத்திற்கு என்னை அம்மா அனுப்பி வைத்துள்ளார். தன்னுடைய கடைசி காலத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை இல்லை. அப்போது அவர் மீது வைத்திருந்த அபிமானத்தைப் பற்றி அம்மா என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அது பற்றி நான் வெளியே சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது. நான் கட்சித் தலைமை மீது வைத்துள்ள விசுவாசம் இது நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு அதிமுகவில் அதிகாரம் வேண்டுமென்றால் நீங்கள் அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்வீர்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்ததுதான். அதனால் தான் இன்று உங்களால் கட்சி வேட்டி கூட கட்ட முடியாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் நீங்கள் மட்டுமே காரணம். எனக்கு எச்சரிக்கை விடுக்க கூடிய தகுதி உங்களுக்கு கிடையாது. இதையும் மீறி நீங்கள் விவாதிக்க விருப்பப்பட்டால் நான் தயாராக தான் இருக்கிறேன். எப்போது எங்கு வைத்துக்கொள்ளலாம் என்று நீங்களே கூறுங்கள் என்று ஓபிஎஸ்-க்கு ஆர்பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.