
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இதனால் whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனமானது புது புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. இதனால் வாட்ஸ் அப்புக்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் அதனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில் தற்போது whatsapp தன்னுடைய பயனாளிகளுக்கு மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை அனுப்பி வருகிறது. அதில் மர்ம எண்களிலிருந்து சுயவிவரம் கேட்டோ, பணம் தருவது அல்லது சந்தேகப்படும்படி லிங்க் வந்தாலோ அந்த செய்திகளுக்கு பதிலளிக்கவும் அல்லது பார்வர்டு செய்யவோ வேண்டாம்.
அந்த நம்பரை உடனடியாக பிளாக் செய்து விட்டு அது தொடர்பாக புகார் கொடுக்க வேண்டும். உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற அனுமதியை அழைத்து செட்டிங்ஸில் மாற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து மெசேஜ் வரும்போது அதற்கு பதில் அளித்தாலோ அல்லது அந்த மெசேஜை ஃபார்வேர்டு செய்தாலோ மோசடிகள் அரங்கேற வாய்ப்பு இருப்பதால் whatsapp தற்போது இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.