
மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டியை நடத்துகின்றன.
அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளை தமிழகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி பேசினார். இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அலை சறுக்கு போட்டி தற்போது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது