இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா குடிமக்கள் வசித்து வருகிறார்கள். வேலை, கல்வி மற்றும் சுற்றுலா நோக்கத்தில் இந்தியா பயணிக்கும் அமெரிக்கர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அமெரிக்க அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் சமீபமாக நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்தியாவில் தங்கியுள்ள மற்றும் பயணிக்கத் திட்டமிடும் அமெரிக்க குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தனியாக பயணம் செய்யும் பெண்கள் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான தனிப்பட்ட எச்சரிக்கையும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண்கள் தனியாக இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் போன்ற இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ளதால், அந்த இடங்களுக்கு செல்ல கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்திய அரசு சார்பாகவும் இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அவை பாதுகாப்பற்ற இடங்கள் என்பதாலேயே இத்தகைய எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் வசிக்கும் அல்லது பயணிக்க விரும்பும் அமெரிக்கர்களுக்கு இது மிக முக்கியமான அறிவுறுத்தலாகும்.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பான சூழல் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, வெளிநாட்டு குடிமக்களின் நம்பிக்கையை இழக்கக்கூடாத நிலைமை உருவாகக் கூடாது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.