அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்போது நாடு கடத்தும் போது இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களுக்கு கைவிலங்கு மற்றும் கால் சங்கிலி போடப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும் போது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கை விலங்கு போடும் நடைமுறை என்பது அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போட மாட்டார்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது வழக்கமான நடைமுறைதான். இந்தியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.மேலும் திரும்பி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.