
விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலாவுகிறது. விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? எங்கு பாமக தலைவர் அன்புமணி காட்டமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். இதற்கு தேர்தலே தேவையில்லை திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். குழந்தைகளை கூட கடத்தி வைத்துவிட்டு ஓட்டு போட்டால்தான் விடுவோம் என திமுகவினர் மிரட்டக் கூடச் செய்வார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.