சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ் மோகத்தால் நடந்த ஒரு  ஒரு விபரீத சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு இளைஞர் ரயில் பாதையோரம் நடந்து சென்று ரீல்ஸ் எடுக்க முயன்றபோது,  அந்த வழியாக வந்த ரயில் வாலிபர் மீது மோதியது. இதில் வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அதில் இருந்து அவர் சற்று நேரத்தில் எழுந்து நிற்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை. அதே சமயம், ரீலை உருவாக்கிய பின் அந்த இளைஞருக்கு என்ன ஆகியது என்பதும் அறியப்படவில்லை. இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில்  தண்டவாளத்தில் ரயில் வேகமாக  சென்ற நிலையில் வாலிபர் மீது மோதியது. குறைந்தது சில நிமிடங்கள் அச்சத்தில் இளைஞர் கீழே விழுந்து பின் எழுந்தாலும், அந்த விபத்தின் தாக்கம் மிகுந்ததாகவே தெரிகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியிலும் கோபத்திலும் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

“ஒரு ரீலுக்காக உயிரைப் பணயம் வைப்பது புத்திசாலித்தனமா?” என்று பலரும் கேள்வி எழுப்ப, “இளம் தலைமுறை சினிமா போல் சுலபமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதாகவும் கொஞ்சமாவது சுய புத்தியுடனும்  பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும், ரயில்வே பாதைகளில் காவல் கட்டுப்பாடுகள் இல்லாததையும் சிலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

இளைஞர்கள் அப்படி ஒரு ஆபத்தான சூழலில் வீடியோ எடுப்பதை தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் “ரீல் வாழ்க்கையை விட ரியல் வாழ்க்கை முக்கியம்” என்பதை இவ்வாறான சம்பவங்கள் நம்மை மீண்டும் நினைவூட்டுகின்றன.