2011 ஆம் வருடம் இந்தியா இலங்கை வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பத்தாவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஆனது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடியது. கௌதம் கம்பீர் 97 ரன்களும், கேப்டன் டோனி 91 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினார்கள். இந்த நிலையில் நேற்றோடு இந்தியா உலகக்கோப்பை வென்று 14 வருடங்கள் நிறைவடைந்தது.

அந்த உலகக்கோப்பையை ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது என்னவென்றால் இறுதி போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியில் டாஸ்  வென்றதாக நினைத்தார்கள். சங்ககாராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப் போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான்.