சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் நீரில் மூழ்கி சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காணாமல் போய் உள்ளனர்” என தெரிவித்துள்ளது. எப்போதும் மிகக் குறைந்த அளவிலேயே பெய்ஜிங்கில் மழை பதிவாகும். ஆனால் இம்முறை உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு கனமழை பெய்திருப்பது அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது.
இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more