உலகம் முழுவதும் நேற்று யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி உலக அளவில் 191 நாடுகளில் ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற மையப்பொருளில் யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேற்று பல தரப்பினரும் யோகா செய்து அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது ஒரு குழந்தையின் யோகா வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.

அதாவது டெல்லி செங்கோட்டையில் உள்ள கடமை பாதையில் நேற்று யோகா தின விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சுட்டி குழந்தை தன் பெற்றோருடன் கலந்து கொண்டது. இந்நிலையில் அங்கிருந்த அனைவரும் யோகாசனம் செய்து கொண்டிருந்தபோது குழந்தையும் தனது ஸ்டைலில் தலைகுப்பிற நின்றபடி யோகா செய்தது. பொதுவாக குழந்தைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்டு அதன்படி செய்வது மிகவும் அரிது. மேலும் அப்படி இருக்கையில் ஒரு குழந்தை மற்றவர்களை பார்த்து தான் போகிற போக்கில் அரிதாக செய்த இந்த விஷயம் தற்போது அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.