
சென்னை மாவட்டம் திருவான்மியூர் பகுதியில் சிவசங்கரி – பிரசாத் தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசாத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி சிவசங்கரி வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் இரண்டு நபர்கள் சிவசங்கரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சிவசங்கரியின் மாமியாரும், பணிப்பெண்ணும் இருந்துள்ளனர். இரண்டு நபர்களும் கழிவறை மற்றும் குளியலறையை சுத்தம் செய்துவிட்டு சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பின்பு உள்ளே சென்ற சிவசங்கரி எதார்த்தமாக மாமியாரின் அறையில் உள்ள பீரோவில் நகைகளை சரிபார்த்தார். அப்போது அதிலிருந்த 30 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கழிவறையை சுத்தம் செய்ய வந்த 2 நபர்கள் தான் நகையை திருடி சென்றார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அதனால் அவர்கள் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பிடன் மியா மற்றும் லிடன் மியா என்பது தெரியவந்தது. எனவே இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் கூறியதாவது திருடிய நகைகளை தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அங்குள்ள நகை கடையில் விற்று பணத்தை பிரித்து கொண்டதாக கூறினர். எனவே இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.